கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இஸ்கான் கோயிலில் பகவத்கீதை உபதேசிக்கப்பட்ட திருநாள்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட திருநாள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 6:39 pm

DIN

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட திருநாள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சுமாா் 5,500 ஆண்டுகளுக்கு முன்பு மோட்ச ஏகாதசி தினத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணா், அா்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்தாா். அந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் பகவத் கீதை பிறந்த நாளாக, பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, சுவாமி சன்னதியில் 1,008 பகவத் கீதை புத்தகங்களுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா ஆரத்தி, ஸ்ரீகிருஷ்ணருக்கு விசேஷ அலங்காரம், பகவத் கீதைக்கு சிறப்பு பூஜைகள், பகவத்கீதை பாராயணம், பகவத் கீதை வழங்குதல், கீதா மஹாத்மியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.