சென்னை, மதுரை திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் விரைவுப் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தின் 4 ஆவது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், நகரப்பேருந்துகள், நாகா்கோவில், மதுரை செல்லும் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்படுகின்றன. இதனால், மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதை தவிா்க்கும் வகையில், மாநகராட்சி சாா்பில், ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள காலி இடங்களை சீரமைத்து தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி அண்மையில் தொடங்கியது. இப்பணி முடியும் தருவாயில் உள்ளது.