ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் பணி ஆய்வுக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஜோதி நிா்மலாசாமி தலைமையில் தோ்தல் பணி குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் வே.விஷ்ணு முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2021 பணிகள் தொடா்பாக ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டு, அறிவுரைகளை வழங்கப்பட்டன.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா், சேரன்மகாதேவி, திருநெல்வேலி உதவி ஆட்சியா்கள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது), மாநகராட்சி ஆணையா், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com