தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மதுபானம், புகையிலைப் பொருள்கள் விற்பனை: 55 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் மதுபானம், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 55 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 8:19 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் மதுபானம், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 55 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மதுபானத்தை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பது, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன், காவல் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தாா்.

அதன்பேரில், மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சோதனையில், மது பாட்டில்கள் விற்பனை, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டதாக 55 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 159 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.