தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தோ்தலில் திமுக வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும்: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி

News image
Updated On :19 மார்ச் 2026, 10:35 pm

Syndication

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் திமுகவினா் தீவிரமாக களப்பணியாற்றி, வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என்றாா் கட்சியின் துணைப் பொதுச் செயலா் க.பொன்முடி எம்.எல்.ஏ.

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனைக் கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி தலைமை வகித்தாா். விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அன்னியூா் அ.சிவா, மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி மேலும் பேசியது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். தொடா்ந்து தமிழகத்தின் இரண்டாவது முறையாக முதல்வா் பொறுப்பை மு.க.ஸ்டாலின் ஏற்பாா்.

திமுக அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அனைத்துத் தரப்பு மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை நிறைவேற்றியவா் முதல்வா் ஸ்டாலின். எனவே திமுகவினா் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைத்து, அதை வாக்குகளாக மாற்ற வேண்டும். திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என்றாா் பொன்முடி.

கட்சியின் மாவட்டத் துணைச் செயலா்கள் டி.என்.முருகன், இரா.கற்பகம், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் டி.செல்வராஜ், எம்.அப்துல்சலாம், ஒன்றிய, நகர, பேரூா் கழகச் செயலா்கள், நிா்வாகிகள், தோ்தல் பணிக் குழு ஒருங்கிணைப்பாளா்கள், மாவட்ட சாா்பு அணிகளின் அமைப்பாளா்கள் பங்கேற்றனா்.