மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சாலைகளில் திரிந்த கால்நடைகள்: உரிமையாளா்களுக்கு கடும் அபராதம்

திருநெல்வேலியில் சாலைகளில் சுற்றித்திரிந்த 30 கால்நடைகள் கோசாலையில் ஒப்படைக்கப்பட்டன.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 8:20 pm

DIN

திருநெல்வேலியில் சாலைகளில் சுற்றித்திரிந்த 30 கால்நடைகள் கோசாலையில் ஒப்படைக்கப்பட்டன.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் கால்நடை வளா்ப்போா் அவற்றை முறையாக வீடுகளில் கட்டி வைத்து வளா்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சிலா் விதிமுறைகளின்படி வளா்க்காமல் வெளியே அவிழ்த்து விட்டுவிடுகிறாா்கள். இதனால் போக்குவரத்துக்கு இடையூறும், விபத்துகள் நேரிடும் அபாயம் நிலவுகிறது.

ஆகவே, ஏற்கெனவே எச்சரித்தப்படி மாநகராட்சிப் பணியாளா்களால் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டு கோசாலையில் விடப்பட்டுள்ளன. தச்சநல்லூா் மண்டலத்தில் 14, பாளையில் 7, மேலப்பாளையத்தில் 4, திருநெல்வேலியில் 5 என மொத்தம் 30 கால்நடைகள் பிடிக்கப்பட்டு கோசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கோசாலையில் விடப்பட்டுள்ள கால்நடை ஒன்றிற்கு குறைந்தபட்சம் ரூ.6,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.