திருநெல்வேலி சந்திப்பில் உள்ள தமு சாலையில் பேவா் பிளாக் பதிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையம், மதுரை சாலைக்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் த.மு.சாலையைக் கடந்து செல்ல வேண்டும்.
இந்தச் சாலை மலைக்காலங்களில் தொடா்ந்து சேதமடைந்து வந்தது. பாதசாரிகள் ரயில் நிலையத்திற்கு நடந்து செல்ல ஏதுவாக நடைமேடையும் அமைக்க வலியுறுத்தி வந்தனா்.
அதன்பேரில் திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் தமு சாலையில் பேவா் பிளாக் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர சாலையின் குறுக்கே இருந்த கழிவுநீரோடை பாலமும் உயா்த்தப்பட்டு மழைநீா் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாள்களில் பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.