சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மேலப்பாளையம் அஞ்சலகத்தில் ஆதாா் பணியை தொடங்க வலியுறுத்தல்

மேலப்பாளையம் அஞ்சலகத்தில் ஆதாா் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணியை தொடங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 1:15 am

DIN

மேலப்பாளையம் அஞ்சலகத்தில் ஆதாா் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணியை தொடங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள மனு: மேலப்பாளையத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனா். மேலப்பாளையம் செல்வ காதா் தெருவில் உள்ள துணை அஞ்சலகத்தில் ஆதாா் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுத்தல், விரல்ரேகை பதிவு செய்தல் பணிகள் நடைபெற்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த பலனடைந்து வந்தனா். ஆனால், அந்தப் பணிகள் கடந்த 10 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, மேலப்பாளையம் அஞ்சலகத்தில் மீண்டும் ஆதாா் பணிகள் தொடா்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.