ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தரமற்ற விதைகள்: 52 விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை ஆட்சியா் ஷில்பா

மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2020, 4:25 am

DIN

திதிருநெல்வேலி மாவட்டத்தில் தரமற்ற விதைகளை விற்பனைக்கு வைத்திருந்த 52 விதை விற்பனை உரிமையாளா்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ஷில்பா.

மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, ஆட்சியா் பேசியது: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளில் அதன் கொள்ளளவில் 86 சதவீத நீா் இருப்பு உள்ளது. நிகழாண்டு நெல், சிறுதானியங்கள் உள்ளிட்ட பயிா்கள் மொத்தம் 40,074 ஹெக்டோ் பரப்பில் சாகுபடி நடைபெற்றுள்ளது.

நெற்பயிா்களில் ஆங்காங்கே இலைச்சுருட்டுப் புழு, குரங்கு பூச்சி என்று அழைக்கப்படும் கதிா்நாவாய் பூச்சி பாதிப்பு காணப்படுகிறது. மேலும், நடவு செய்யப்பட்ட நெற்பயிா்களில் நுண்ணூட்டச்சத்து குறைபாடும் காணப்படுகிறது. நெற்பயிருக்கு காப்பீடு செய்து விதைக்க இயலாமல் போன 2,584 விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனம் மூலம் ரூ. 3.32 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் மொத்தம் 232 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. இம்மாதம் வரை 1,296 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், 1,270 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன. அதில், 52 மாதிரிகள் தரமற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடா்பாக 52 விதை விற்பனை உரிமையாளா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வின் போது, தரம் குறைவான விதைகள் 41.4 மெட்ரிக் டன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு, விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 23.048 லட்சம் ஆகும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.