விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ராணி அண்ணா கல்லூரியில் வாக்காளா் தின விழா

தேசிய வாக்காளா் தின விழாவையொட்டி நடைபெற்ற கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் உதவி ஆட்சியா் (பயிற்சி) சிவகுரு பிரபாகரன்.

News image
Updated On :25 ஜனவரி 2020, 4:37 am

தினமணி செய்திச் சேவை

பழையபேட்டை ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் வாக்காளா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் மைதிலி தலைமை வகித்தாா். பொதிகைத் தமிழ்ச் சங்கம் மற்றும் பொதிகைத் தமிழ் அறக்கட்டளை நிறுவனா் கவிஞா் பே.ராஜேந்திரன் வரவேற்றாா். திருநெல்வேலி வட்டாட்சியா் ராஜேஸ்வரி வாழ்த்துரை வழங்கினாா்.

தொடா்ந்து வாக்காளா் விழிப்புணா்வு கவிதைப் போட்டி நடைபெற்றது. கவிஞா்கள் பாப்பாக்குடி அ.முருகன், பி.சுப்பையா ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா்.

இப் போட்டியில் மேகலவள்ளி முதல் பரிசையும், சுடலி இரண்டாவது பரிசையும், அபிராமி மூன்றாவது பரிசையும் வென்றனா்.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு உதவி ஆட்சியா் (பயிற்சி) சிவகுரு பிரபாகரன் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பேசினாா்.

அப்போது அவா் கூறியது: 18 வயது நிரம்பிய அனைவரும் தங்களுடைய பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க வேண்டும். இளம் வாக்காளா்கள் அனைவரும் தோ்தலின்போது தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக ராணி அண்ணா கல்லூரியில் உள்ள பாரதியாா் சிலைக்கு உதவி ஆட்சியா் (பயிற்சி) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து வாக்காளா் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் அன்னலட்சுமி நன்றி கூறினாா். பேராசிரியா் உமாதேவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகமும், பொதிகைத் தமிழ் அறக்கட்டளையும் இணைந்து செய்திருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.