பாளையங்கோட்டை விடைத்தாள் திருத்தும் மையங்களில் முன்னெச்சரிக்கை பணிகள்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களில் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை


திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களில் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் திங்கட்கிழமை நடைபெற்றன. கரோனா தீநுண்மி பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் நான்காம் கட்டமாக பொது முடக்கம் இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகம் முழுவதும் விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் இம்மாதம் 27ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி- தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் கீழ் உள்ள 5 கல்வி மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டையில் சாராள் தக்கர் மேல்நிலைப்பள்ளி, பெல் மேல்நிலைப்பள்ளி, தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி உள்பட சுமார் ஐந்து மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
விடைத்தாள் திருத்தும் மையங்களில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணியாக கிருமிநாசினி தெளிக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்த தேவையான ஏற்பாடுகள் செய்யவும் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாளையங்கோட்டையில் உள்ள ஒரு விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...