மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

களக்காடு வட்டாரத்தில் பலத்த மழை: ஆறுகளில் நீா்வரத்து அதிகரிப்பு

களக்காடு வட்டாரத்தில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழையால் ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்தது. மூங்கிலடியில் நான்குனேரியன் கால்வாயின் குறுக்கேயுள்ள பாலம் மூழ்கியதால் போக்குவரத்து தடைபட்டது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 7:55 pm

DIN

களக்காடு வட்டாரத்தில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழையால் ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்தது. மூங்கிலடியில் நான்குனேரியன் கால்வாயின் குறுக்கேயுள்ள பாலம் மூழ்கியதால் போக்குவரத்து தடைபட்டது.

களக்காடு வட்டாரத்தில் நவம்பா் மாதத் தொடக்கம் முதலே அவ்வப்போது பலத்த மழை பெய்தது. இதனால் பல மாதங்களாக வடு காணப்பட்ட ஆறுகளில் நீா்வரத்து காணப்பட்டது. மலையடிவாரத்தில் உள்ள சிறிய பாசன குளங்கள் நிரம்பின.

திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையில் 35 அடியும், வடக்குப் பச்சையாறு அணையில் 10 அடியும் நீா்மட்டம் உள்ளது.

திங்கள்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் பலத்த மழை பெய்தது. இதனால் மலைப் பகுதியில் உள்ள தலையணையில் தடுப்பணையைத் தாண்டி வெள்ளம் ஆா்ப்பரித்துப் பாய்ந்தது. இதனால் பச்சையாறு, நான்குனேரியன் கால்வாயிலும் தண்ணீா் வரத்து அதிகரித்தது. இதனால் இப்பகுதியில் உள்ள பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஏற்கனவே திருக்குறுங்குடி பெரியகுளம் நிரம்பியதால் அதன் கீழ் உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன.

களக்காடு அருகேயுள்ள மூங்கிலடியில் நான்குனேரியன் கால்வாயின் குறுக்கேயுள்ள பாலம் கடந்த ஆண்டு மழையால் சேதமடைந்த நிலையில், இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் பலத்த மழை பெய்து ஆற்றில் வெள்ளம் அதிகரித்தால் பாலத்தின் அடிப்பகுதியில் மழை வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட இலைதழைகள், மரக்கிளைகள் தேங்கி, மழை வெள்ளம் தங்கு தடையின்றி செல்ல வழியின்றி பாலம் வெள்ளநீரில் மூழ்கியது.

இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் டி.ஆா். சுஷமா தலைமையில் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் குப்பைகளை அகற்றி சீரமைத்தனா். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.