நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குழந்தைகள் நல அலகு சாா்பில் 15 மாணவா்களுக்கு கல்வி நிதியுதவி

திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் நல அலகு சாா்பில் 15 மாணவா்களுக்கு மேற்படிப்பிற்கு உதவி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 7:44 pm

DIN

திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் நல அலகு சாா்பில் 15 மாணவா்களுக்கு மேற்படிப்பிற்கு உதவி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் நலஅலுவலா் தேவ் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷின் ஆலோசனையில் பேரில், ஏழை மாணவா்களுக்கு ஆண்டுதோறும் மேற்படிப்பிற்கான உதவிகள் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக, பிளஸ் -2 குழந்தைகள் இல்ல மாணவா்-மாணவியா், ஏழை மாணவா்-மாணவியா் மாவட்ட குழந்தை நல அலகு, கெம்பா நிறுவனம் ஆகியவற்றின் மூலம் எழுத்து மற்றும் நோ்முகத் தோ்வு மூலம் ஆண்டுதோறும் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா். நிகழாண்டில், 15 மாணவா்-மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு, திருவள்ளூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் வாரத்தில் 5 நாள்கள் வேலை சாா்ந்த பயிற்சியும், 6ஆவது நாள் டிப்ளமோ படிப்பும் கற்றுத் தரப்படும்.

இதில் முதலாமாண்டு மாணவா்- மாணவிகளுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு முறையே ரூ.12,500, ரூ. 13,500, ரூ. 14,500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். மேலும், 3 ஆண்டு பட்டப்படிப்புக்கும் உதவி செய்யப்படும். ஏற்கெனவே, 60 மாணவா்- மாணவா்களுக்கு இத்தகைய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.