திருநெல்வேலி மாநகராட்சியின் பாளையங்கோட்டை மண்டலத்தில் உள்ள காந்திஜி தினசரி சந்தையில், பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ்அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள கடைகளை அருகேயுள்ள ஜவாஹா் மைதானத்திலும், எருமைக்கிடா மைதானத்திலும் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இதற்கு இந்து அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், புகழ்பெற்ற பாளையங்கோட்டை தசரா பண்டிகையில் 12 சப்பரங்கள் வீதியுலா வந்து நின்று செல்லும் மைதானங்களில் தற்காலிகக் கடைகள் அமைப்பது சரியாக இருக்காது எனக்கூறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.