ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

ஆலங்குளத்தில் குருத்தோலை ஞாயிறு: முக்கிய வீதிகளில் திரளான கிறிஸ்தவர்கள் பவனி!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்ற குருத்தோலை பவனி குறித்து...

News image

பவனியில் பங்கேற்ற ஒரு பகுதியினர்.

படம்: தினமணி.

Updated On :29 மார்ச் 2026, 5:15 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஆலங்குளம்: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதிலிருந்து எழு வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர்.

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி முக்கிய வீதிககளில் பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம்.

ஜெருசலேம் நகரில் கோவேறு கழுதையில் பவனியாக வந்த இயேசு கிறிஸ்துவை அங்கிருந்த மக்கள் குருத்தோலைகளுடன் வரவேற்று 'தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா' என்று முழுங்கியதை நினைவு கூறும் வகையில் இந்த குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.

ஆலங்குளம் அண்ணா நகர் நல் மேய்ப்பர் ஆலயத்தில் நடைபெற்ற ஒரு தோலை ஞாயிறு ஆராதனையில் பங்கேற்ற ஆயர்கள்

ஆலங்குளம் அண்ணா நகர் நல் மேய்ப்பர் ஆலயத்தில் நடைபெற்ற ஒரு தோலை ஞாயிறு ஆராதனையில் பங்கேற்ற ஆயர்கள்

இதன்படி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சி.எஸ்.ஐ. மற்றும் கத்தோலிக்க திருச்சபை கிறிஸ்தவர்கள் இணைந்து குருத்தோலைகளை கையில் ஏந்தியவண்ணம் பாடல்களை பாடி முக்கிய வீதியில் பவனியாக சென்றனர். இதைத் தொடர்ந்து குருத்தோலை ஞாயிறு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.