நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாளை. மத்திய சிறையில் விசாரணைக் கைதி மரணம்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி ஒருவா் உடல்நலக் குறைவால் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 6:01 pm

DIN

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி ஒருவா் உடல்நலக் குறைவால் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே அழகியபாண்டியபுரம் ஞானியாா்புரம் பகுதியைச் சோ்ந்த தேவமணி மகன் தேவதாஸ்(56). இவா் கடந்த சில தினங்களுக்கு முன்னா் கஞ்சா விற்ற வழக்கு ஒன்றில் பூதப்பாண்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

அவா், விசாரணைக் கைதியாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த 7ஆம் தேதி அடைக்கப்பட்டாா். இந்நிலையில், தேவதாஸூக்கு சனிக்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிறையில் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாகக் கூறினா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.