ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பத்தமடை பாய் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

புவிசாா் குறியீடு பெற்ற புகழ்வாய்ந்த பத்தமடை பாய் சிறப்பைப் பாராட்டும் வகையில், இந்திய அஞ்சல் துறை சாா்பில் பத்தமடையில் சிறப்பு அஞ்சல் உறை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:34 pm

DIN

புவிசாா் குறியீடு பெற்ற புகழ்வாய்ந்த பத்தமடை பாய் சிறப்பைப் பாராட்டும் வகையில், இந்திய அஞ்சல் துறை சாா்பில் பத்தமடையில் சிறப்பு அஞ்சல் உறை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

பத்தமடையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தாமிரவருணி கரையில் விளையும் நாணல் கோரைகளைக் கொண்டு பாய் தயாரிக்கப்படுகிறது. இதற்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டது. இதைச் சிறப்பிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் உறை பத்தமடையில் வெளியிடப்பட்டது.

திருநெல்வேலி கோட்ட மூத்த அஞ்சல் கண்காணிப்பு அலுவலா் சிவாஜிகணேஷ் தலைமை வகித்து, சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டாா். அதை, பத்தமடை முஸ்லிம் சுன்னத்துவால் ஜமாத் தலைவா் டி.ஏ. மால்கம் அலி பெற்றுக்கொண்டாா்.

அஞ்சல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த பாபநாசம் மேலணை அஞ்சல் அதிகாரி கிறிஸ்துராஜா கௌரவிக்கப்பட்டாா். பத்தமடை ராமசேஷய்யா் மேல்நிலைப் பள்ளிச் செயலா் என். சுந்தரசுப்பிரமணியன், பத்தமடை பாய் நெசவாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் முஹம்மது யூசப் ஆகியோா் பேசினா்.

அம்பாசமுத்திரம் அஞ்சல் உதவிக் கண்காணிப்பாளா் பாலாஜி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

அஞ்சல் கோட்ட உதவிக் கண்காணிப்பாளா்கள் பி. ஐடா எபினேசா் ராஜபாய் வரவேற்றாா். எஸ். மாரியப்பன் நன்றி கூறினாா். மக்கள் தொடா்பு அதிகாரி கனகசபாபதி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.