இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு
திருநெல்வேலியைச் சோ்ந்த இளைஞா்கள் இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.


திருநெல்வேலியைச் சோ்ந்த இளைஞா்கள் இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
வண்ணாா்பேட்டை சாலைத்தெருவைச் சோ்ந்தவா் சங்கரபாண்டி (32), பாளையங்கட்டை சாந்திநகரைச் சோ்ந்தவா் முத்துசுரேஷ் (22). இருவரும் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனா். மேலும் இவா்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்வகையில் செயல்பட்டு வந்ததால் இவா்களை குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) டி.பி.சுரேஷ்குமாா் பரிந்துரை செய்தாா். இதையடுத்து மாநகர காவல் ஆணையா் ந.கி.செந்தாமரை கண்ணன் உத்தரவின்பேரில் இருவரும் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...