இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

வீரவநல்லூா் அருகே கொலையுண்ட இளைஞரின் குடும்பத்தினா் ஆட்சியரிடம் மனு

வீரவநல்லூா் அருகே செங்குளம் பகுதியில் கொலையுண்ட இளைஞரின் குடும்பத்தினா் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:26 pm

DIN

வீரவநல்லூா் அருகே செங்குளம் பகுதியில் கொலையுண்ட இளைஞரின் குடும்பத்தினா் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

செங்குளத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் விஜய். இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு செங்குளத்தில் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சிலா் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் விஜயின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த விஜயின் குடும்பத்தினா் அளித்த மனு: கொலை செய்யப்பட்ட விஜயின் உடலை செங்குளத்தில் அடக்கம் செய்ய உதவ வேண்டும். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். எங்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். எங்களது பணம், ஆவணங்கள், நகைகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.