தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி! இந்தியா மீது 100% வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!ஃபிஃபா உலகக் கோப்பை! இறுதிப் போட்டியை நேரில் காண்கிறார் டிரம்ப்!தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,04,800-க்கு விற்பனைவிதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோதியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!
/

வாழையின் சிறப்பு

வாழைத்தாரின் சீப்புகளில் உள்ள பழங்களைக் கவனித்தால், ஒவ்வொரு வாழைப்பழமும் சற்று மேல் நோக்கி வளைந்தபடி இருக்கும்.

News image
Updated On :29 மார்ச் 2026, 4:04 am IST

முனைவர் ஜி. குமார்

வாழைத்தாரின் சீப்புகளில் உள்ள பழங்களைக் கவனித்தால், ஒவ்வொரு வாழைப்பழமும் சற்று மேல் நோக்கி வளைந்தபடி இருக்கும். கேரட், வெள்ளரி போன்ற காய்கறிகளோ நேரடியாக பூமியை நோக்கி இருக்கும். வாழையின் வளைந்த வடிவம் உண்மையில் புவி ஈர்ப்பு விசையை எதிர்ப்பது போன்ற தோற்றத்தைத் தரும். அது வாழை அழியாமல் இருக்க இயற்கை தந்த வரப் பிரசாதம்.

புவி ஈர்ப்பு விசையை ஏற்றிருந்தால் வாழைப் பழங்கள் கீழ் நோக்கி நேராகத் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும். அந்த நிலை ஏற்பட்டிருந்தால் வாழைக்கான முக்கிய போஷாக்கான சூரிய ஒளியை அதற்குக் கிடைக்காமல் நிறுத்தியிருக்கும். எனவே, நிலைத்து வாழ வாழை ஒரு புரட்சிகரமான முடிவை எடுக்க இயற்கை உதவுகிறது. அதாவது, புவி ஈர்ப்பு விசை விதியையே வாழை கடைப்பிடிக்க மறுக்கிறது. தாவரவியலில் 'புவி தூண்டுத் திருப்பம்' என்று இந்த நிலையானது சொல்லப்படுகிறது.

வேர்கள் கீழ் நோக்கி வளர்ந்தாலும் தண்டுப் பகுதி மேல் நோக்கியே வளர்கிறது. ஆனால், வாழையில் ஏற்படுவது மிகவும் விநோதமானது. குறைவாகக் கிடைத்தாலும் இலையை மீறி எவ்வளவு ஒளியைப் பெற முடியுமோ அவ்வளவையும் பெற வாழைப்பழம் உடலை வளைத்து மேல்புறம் எழும்புகிறது.

அத்தனை பழங்களும் கீழ் நோக்கித் தொங்கியிருந்தால் கனமும் அதிகமாகி தார்களுடம் மரமும் கீழே விழும் நிலையே ஏற்பட்டிருக்கும். எனவே வளைந்த மேல் நோக்கிய உருவமே தாரில் வாழைப்பழங்களுக்கு வேண்டிய இடம் அளித்து ஒளியையும் எடுத்துக்கொள்ள முயற்சி செய்ய இயற்கை தந்த வடிவம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.