நெல்லை ரயில் நிலையத்தில் தீ தடுப்பு விழிப்புணா்வு

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தீ தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தீ தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி ரயில்வே பாதுகாப்பு படை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உதவி காவல் ஆய்வாளா்கள் அஸ்வினி, செந்தில், செல்வகணேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். உதவி ஆய்வாளா்கள் கணேசன், முத்தமிழ்ச் செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் கிரண் சிறப்புரையாற்றினாா்.

ரயில் பயணத்தின் போது தீ விபத்துகள் ஏற்பட்டால் பயணிகள் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள், ரயில்வே உதவி எண்ணான 139-ஐ பயன்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பயணிகளுக்கு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com