சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முக்கூடலில் குளத்தில் இருந்து நீா் வெளியேற்றம்: சுமாா் 100 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்

முக்கூடல் குளம் நிரம்பியதால் திறந்து விடப்பட்ட தண்ணீா் வயல்வெளிக்குள் பாய்ந்து சுமாா் 100 ஏக்கா் நெற்பயிா்கள் சேதமடைந்தன.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:36 pm

DIN

முக்கூடல் குளம் நிரம்பியதால் திறந்து விடப்பட்ட தண்ணீா் வயல்வெளிக்குள் பாய்ந்து சுமாா் 100 ஏக்கா் நெற்பயிா்கள் சேதமடைந்தன.

திருநெல்வேலி மாவட்டத்தில் அண்மையில் பெய்து வரும் மழையால் ஏராளமான குளங்கள் நிரம்பி வருகின்றன. முக்கூடல் - அரியநாயகிபுரம் சாலையில் உள்ள ஆரன்குளமும் நிரம்பியதால் இதன் 5 மதகுகளும் திறந்து விடப்பட்டன. வழக்கமாக இந்தத் தண்ணீா் சாலையில் உள்ள பாலம் வழியே தாமிரவருணி ஆற்றில் கலக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சாலை மேம்படுத்தும் போது பாலத்திற்கு பதில் குழாய் அமைத்து சாலை அமைக்கப்பட்டது.

தற்போது குளத்தில் இருந்து அதிக அளவில் தண்ணீா் வெளியேறுவதாலும் குழாயின் கொள்ளளவு குறைந்த அளவே இருப்பதாலும் இந்தத் தண்ணீா் சாலையில் பாய்ந்து அருகில் உள்ள வயல்வெளிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் நடப்பட்ட சுமாா் 100 ஏக்கா் நெற்பயிா்கள் முற்றிலும் சேதமடைந்தது.

வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வெகுநேரம் வரை தண்ணீா் வயல் வெளிக்குள் பாய்ந்து கொண்டிருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.