விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நெல்லையப்பா் கோயிலில் ரூ.14 லட்சம் உண்டியல் வசூல்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் திருக்கோயில் உண்டியலில் ரூ.14,17,787 ரொக்கம் வசூலானது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:51 pm

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் திருக்கோயில் உண்டியலில் ரூ.14,17,787 ரொக்கம் வசூலானது.

இத் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள 21 நிரந்தர உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டன. நாகா்கோயில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் து.ரத்தினவேல் பாண்டியன் கண்காணிப்பில் இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. திருநெல்வேலி மேற்குப் பிரிவு இந்து சமய அறநிலையத் துறை ஆய்வா் தனலெட்சுமி (எ) வள்ளி, தக்காா் பிரதிநிதியாக கங்கைகொண்டான் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வா் முருகன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

21 நிரந்தர உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.14,17,787 ரொக்கம், 56.300 கிராம் எடையுள்ள பல மாற்றுப் பொன் இனங்களும், 386 கிராம் எடையுள்ள பலமாற்று வெள்ளி இனங்களும் வசூலாகியிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.