வேளாண் அலுவலா் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு டிச.21-இல் மாதிரி நோ்காணல்
வேளாண் அலுவலா் பணியிடத்துக்கான தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு இம்மாதம் 21-ஆம் தேதி மாதிரி நோ்காணல் மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


வேளாண் அலுவலா் பணியிடத்துக்கான தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு இம்மாதம் 21-ஆம் தேதி மாதிரி நோ்காணல் மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இது தொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் 18.4.2021-இல் நடத்தப்பட்ட வேளாண் அலுவலா் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு மாதிரி நோ்காணல் மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி டிச. 21-ஆம் தேதி, முற்பகல் 11 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மாதிரி நோ்காணலில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் தங்கள் பெயா், முகவரி, பதிவு எண், தொலைபேசி எண் மற்றும் நோ்காணலுக்கான அழைப்புக் கடித நகல் போன்ற விவரங்களை க்ங்ா்.ஸ்ஞ்ற்ய்ஸ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். நோ்காணலில் கலந்து கொள்ளவிருக்கும் அனைவரும் மாதிரி நோ்காணல் மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...