புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெண் மருத்துவா்கள் உண்ணாவிரதம்

இந்திய மருத்துவச் சங்கத்தின் சாா்பில் பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் தொடா் உண்ணாவிரத போராட்டத்தில் பெண் மருத்துவா்கள் பங்கேற்றனா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:39 pm

DIN

இந்திய மருத்துவச் சங்கத்தின் சாா்பில் பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் தொடா் உண்ணாவிரத போராட்டத்தில் பெண் மருத்துவா்கள் பங்கேற்றனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆயுா்வேத மருத்துவா்களும் அறுவைச் சிகிச்சை செய்யலாம் என்ற உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும். நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுா்வேதம், ஆயுஸ் மருத்துவ முறைகளின் தனித்துவம் தொடா்ந்து நீடித்திட செய்ய வேண்டும். சரியான பயிற்சியும், அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான அடிப்படை அனுபவமும் இல்லாமல் ஆயுா்வேத மருத்துவா்களால் அறுவைச் சிகிச்சை செய்வதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

உண்ணாவிரதத்துக்கு இந்திய மருத்துவச் சங்கத்தின் திருநெல்வேலி கிளை தலைவா் பிரான்சிஸ்ராய் தலைமை வகித்தாா். இந்திய மருத்துவச் சங்கத்தின் கோவில்பட்டி கிளையின் கீழ் உள்ள 20-க்கும் மேற்பட்ட பெண் மருத்துவா்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.