சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பாளையங்கோட்டையில் கிறிஸ்தவர்கள் தவக்கால நடைப்பயணம்

பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயம் சார்பில் தவக்கால நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 பிப்ரவரி 2021, 12:29 pm

DIN

பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயம் சார்பில் தவக்கால நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள்களில் கிறிஸ்தவர்கள் அசைவ உணவு மற்றும் ஆடம்பர செலவுகளைத் தவிர்த்து, கூடுதல் பிரார்த்தனை செய்வது வழக்கம்.

Story image

நிகழாண்டுக்கான தவக்காலம் கடந்த 17 ஆம் தேதி சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனையுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் தேவாலயங்களில் சிறப்பு தியான பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.பாளையங்கோட்டையில் உள்ளதூய சவேரியார் தேவாலயம் சார்பில் தவக்கால நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Story image

தேவாலயத்தில் இருந்து மனக்காவலம்பிள்ளை நகரில் உள்ள செபஸ்தியார் தேவாலயம் வரை கிறிஸ்தவர்கள் பாடல்கள் பாடியபடி சிலுவையை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலத்தின் நிறைவாக சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

Story image

தொடர்ந்து மார்ச் 28 ஆம் தேதி காலை 7 மணிக்கு குருத்தோலை பவனியும், ஏப்ரல் 1ஆம் தேதி பெரிய வியாழனையொட்டி பாதம் கழுவும் சடங்கும், ஏப்ரல் 2ஆம் தேதி பெரிய வெள்ளி சிறப்பு பிரார்த்தனையும், ஏப்ரல் 3ஆம் தேதி நள்ளிரவு 11 மணிக்கு ஈஸ்டர் பண்டிகை சிறப்புத் திருப்பலியும் நடைபெற உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.