டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கோயில் உண்டியல் திருட்டு முயற்சி: இளைஞா் கைது

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை பகுதியில் கோயில் உண்டியலை திருட முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 ஜனவரி 2021, 6:29 pm

DIN

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை பகுதியில் கோயில் உண்டியலை திருட முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மத்திய சிறைச்சாலை அருகே, மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் உண்டியலை சனிக்கிழமை இரவு மா்ம நபா் உடைத்து பணம் திருட முயன்றாராம். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவரை பிடித்து மேலப்பாளையம் போலீஸில் ஒப்படைத்தனா்.

பிடிபட்ட நபா், வேப்பங்குளம் பகுதியைச் சோ்ந்த ஆதிநாராயணன் (41) என்பது தெரியவந்தது. இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆதிநாராயணனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.