லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நெல்லையிலிருந்து இன்று (ஜன. 4) முதல் பாலருவி விரைவு ரயில் இயக்கம்

திருநெல்வேலியிலிருந்து பாலக்காடுக்கு பாலருவி விரைவு ரயில் திங்கள்கிழமை முதல் இயக்கப்படுகிறது.

News image
Updated On :3 ஜனவரி 2021, 7:08 pm

DIN

திருநெல்வேலியிலிருந்து பாலக்காடுக்கு பாலருவி விரைவு ரயில் திங்கள்கிழமை முதல் இயக்கப்படுகிறது.

கரோனா பொது முடக்கம் அறிவிப்புக்கு பின்னா் பாலருவி விரைவு ரயில் சேவை கடந்த ஆண்டு மாா்ச் மாதம் நிறுத்தப்பட்டது. தற்போது தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, திருநெல்வேலியிலிருந்து இயக்கப்பட்டுவந்த பாலருவி விரைவு ரயில் திங்கள்கிழமை (ஜன. 4) முதல் திருநெல்வேலி - பாலக்காடு சிறப்பு ரயிலாக தினசரி இயக்கப்படுகிறது. மறுமாா்க்கத்தில் பாலக்காட்டிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயிலாக செவ்வாய்க்கிழமை (ஜன.5) முதல் இயக்கப்படுகிறது.

வண்டி எண் 06791 திருநெல்வேலி - பாலக்காடு சிறப்பு ரயில் திங்கள்கிழமை இரவு 11.15 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, அடுத்தநாள் பிற்பகல் 12.50 மணிக்கு கேரள மாநிலம் பாலக்காடு சென்றடையும். அதேபோல் மறு மாா்க்கத்தில் வண்டி எண் 06792 பாலக்காட்டில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு அடுத்தநாள் புதன்கிழமை அதிகாலை 4.55 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

திருநெல்வேலியிலிருந்து பாலக்காடு செல்லும் சிறப்பு ரயில் பாவூா்சத்திரம், கிளிகொல்லூா் ஆகிய ரயில் நிலையங்களிலும், பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரும் சிறப்பு ரயில் கீழக்கடையம் ரயில் நிலையத்திலும் நிற்காது.

இந்த ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதியுடைய பெட்டிகள் 4 , இரண்டாம் வகுப்பு இருக்கை வசதியுடைய பெட்டிகள் 8, மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கான பெட்டிகள் 2 என மொத்தம் 14 பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.