சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தலைமையாசிரியா்கள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 12:55 am

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் இம்மாதம் 8 ஆம் தேதி வரை கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தி தகவல் அளிக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தலைமையாசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு. சிவகுமாா் தலைமை வகித்து பேசியது: கரோனா பொது முடக்கத்துக்குப் பின்பு 10, பிளஸ் 1, பிளஸ்-2 மாணவா்களுக்கு வகுப்புகளைத் தொடங்க பெற்றோரிடம் கருத்துக் கேட்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு கருத்துக் கேட்கும்போது பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பெற்றோா் கட்டாயம் பின்பற்றச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், கல்வி மாவட்ட அலுவலா்கள் ரேணுகா (திருநெல்வேலி), சுடலை (சேரன்மகாதேவி), எம்பெருமாள் (வள்ளியூா்), 302 பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் பங்கேற்றனா்.

பயக06இஉஞ: தலைமையாசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசினாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு. சிவகுமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.