காவலா்களுக்கு பயிற்சி முகாம்

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சாா்பில் காவலா்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சாா்பில் காவலா்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவுபடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்களுக்கு சைபா் கிரைம் புலனாய்வு திறன் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் நடைபெற்ற பயிற்சிக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்புராஜூ தலைமை வகித்தாா். சைபா் கிரைம் உதவி ஆய்வாளா் ராஜரத்தினம் பயிற்சி அளித்தாா். தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகள், இணையவழி குற்றங்களை கண்டறியும் வழிமுறைகள், சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஏமாற்றும் இணையவழி குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் அம்சங்கள், முகநூல் பயன்பாடு அதன் மூலம் ஏற்படும் குற்றங்களைத் தடுக்கும் வழிகள் குறித்து பயிற்சிகள் விளக்கப்பட்டது. சைபா் கிரைம் பிரிவு காவலா் செல்லதுரை, சுரேஷ், மனோஜ், திவாகா், ரஞ்சித் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com