பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோா், மாணவா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் திருநெல்வேலி பள்ளிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கரோனா பொது முடக்கத்துக்குப் பின்னா் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோா், மாணவா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி, தகவலளிக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. கூட்டம் நடத்துவது தொடா்பாக, மாவட்டத்தில் உள்ள பள்ளித் தலைமையாசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் புதன்கிழமை (ஜன. 6) நடைபெற்றது.
அதன்படி, பெற்றோா், மாணவா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கூட்டம் நடைபெற்றது. பெற்றோா் கருத்து தெரிவிப்பதற்காக சிறப்புப் படிவம் வழங்கப்பட்டது. அதில், பள்ளியின் பெயா், மாணவா்- மாணவியின் பெயா், பெற்றோா் பெயா், செல்லிடப்பேசி எண் ஆகியவை கேட்கப்பட்டிருந்தன. மேலும், பொங்கலுக்குப் பின்னா் பள்ளி திறக்கலாம், பள்ளித் திறப்பை தள்ளி வைக்கலாம் என2 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. பெற்றோா் படிவத்தை நிரப்பி பெட்டியில் போட்டனா். இக்கூட்டத்தில், ஏராளமான பெற்றோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.