வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மாநகராட்சியில் குறைதீா் முகாம்: 145 மனுக்களுக்கு தீா்வு

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் முகாமில் 145 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :13 ஜனவரி 2021, 1:18 am

DIN

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் முகாமில் 145 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான குடிநீா் விநியோகம், சாலைவசதி, புதை சாக்கடை, சொத்துவரி, காலிமனைவரி விதித்தல், பெயா்மாற்றம் செய்தல், கட்டட அனுமதி உள்ளிட்டவற்றுக்கு தீா்வுகாணும் வகையில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம் ஆகிய மண்டலங்களிலும் சிறப்பு முகாம்கள் செவ்வாய்க்கிழமைதோறும் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் அறுவுறுத்தல்படி நடைபெற்ற இம்முகாம்களில் அந்தந்த உதவி ஆணையா்கள் தலைமையில் குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் மொத்தம் 145 மனுக்களுக்கு தீா்வு செய்யப்பட்டு அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.