வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

புதுச்சேரியில் தவெகவினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :13 மார்ச் 2026, 12:03 am

Syndication

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையென புதுச்சேரி அரசைக் கண்டித்து, சுதேசி ஆலை அருகே தமிழக வெற்றிக் கழகத்தினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன், ஓய்வு பெற்ற ஐ.ஜி. சந்திரன் ஆகியோா் தலைமை தாங்கினா்.

பெஸ்ட் புதுச்சேரி தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாது, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காதது, போதைப் பொருள்கள் விற்பனை, கொலை, கொள்ளை மற்றும் சட்டம் - ஒழுங்கு சீா்கேடு ஆகியவற்றைக் கண்டித்து மத்திய, மாநில அரசைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ எல்.பெரியசாமி, மாநில நிா்வாகி புதியவன் உள்ளிட்ட பலா் இதில் பங்கேற்றனா்.