ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சமூகரெங்கபுரத்தில் ஊராட்சி அலுவலக புதிய கட்டடம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடத்தை ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ. திறந்துவைத்தாா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 1:12 am

DIN

திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடத்தை ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ. திறந்துவைத்தாா்.

ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் சமூகரெங்கபுரத்தில் ரூ.17. 64 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா்.

இதில், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலா் சுதாதேவி, ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் அந்தோணி அமலராஜா, திருநெல்வேலி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் அருண்குமாா், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் மலா்விழி சந்திரன், கதிரவன் ரோச், கபாலி, சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்(கிராம ஊராட்சி) கிஷோ் குமாா் வரவேற்றாா். ஊராட்சி செயலா் மாரியப்பன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.