புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நெல்லை சித்த மருத்துவக் கல்லூரிக்கு தானியங்கி ரத்தப் பரிசோதனைக் கருவி

பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 3.12 லட்சம் மதிப்பில் தானியங்கி ரத்தப் பரிசோதனைக் கருவி வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:53 pm

DIN

பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 3.12 லட்சம் மதிப்பில் தானியங்கி ரத்தப் பரிசோதனைக் கருவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கானோா் சிகிச்சை பெற்று செல்கின்றனா். உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவும் உள்ளது. இம்மருத்துவமனைக்கு கூடுதலாக உபகரணங்கள் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, புதிதாக தானியங்கி ரத்தப் பரிசோதனைக் கருவி வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் எம். திருத்தணி வரவேற்றாா். பாளையங்கோட்டை எம்எல்ஏ மு. அப்துல்வஹாப் முன்னிலை வகித்தாா்.

ஆட்சியா் வே. விஷ்ணு தொடங்கிவைத்துப் பேசுகையில், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா பேரிடா் காலங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்தது. இங்குள்ள பரிசோதனை மையத்தில், அனுமதிக்கப்பட்ட உள்நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள குறைந்தது 1.30 மணிநேரம் தேவைப்பட்டது.

ஏஅஉஙஅபஞகஞஎவ அசஅகவநஉத என்ற இந்தத் தானியங்கி பரிசோதனைக் கருவி மூலம் 3 நிமிடங்களில் ரத்தப் பரிசோதனை செய்து முடிக்க முடியும். நோயால் பாதிக்கப்பட்டோரின் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை, ஏற்பட்டுள்ள தொற்றை மிகவும் துல்லியமாகவும், விரைவாகவும் அறிய முடியும். மருத்துவப் பரிசோதனைக்கு வருவோருக்கு இக்கருவி பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா் அவா்.

அரசு சித்த மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் ஏ. மனோகா், உறைவிட மருத்துவா் பி. ராமசாமி, அரசு அலுவலா்கள், மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.