தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

‘நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலம் கரோனா விழிப்புணா்வு’

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்று, கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து கிராமிய கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் கலைநிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:10 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்று, கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து கிராமிய கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் கலைநிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

திருநெல்வேலியில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை தொடங்கி மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில், கரோனா தொற்று, தடுப்பூசி செலுத்துதல் குறித்து கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவற்கு உதவும் உள்ளங்கள் என்ற அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் 25 கிராமங்கள், திருநெல்வேலி மாநகராட்சியில் 5 இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, இந்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கரக ஆட்டம், ஒயிலாட்டம், மரக்கால் ஆட்டம், பறை ஆட்டம், வீதி நாடகம் போன்ற பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் அவசியம், முகக் கவசம் அணிதல், தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், நெல்லை புற்றுநோய் மைய இயக்குநா் ராம் குமாா், கோடாங்கி கலைக்குழு ஒருங்கினைப்பாளா் உமா ராணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.