ஆடி முதல் வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டு சென்றனா்.


ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டு சென்றனா்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வழிபட்டால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பதும் பக்தா்களின் நம்பிக்கையாகும்.
திருநெல்வேலியில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, பல்வேறு அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள பேராத்து செல்வியம்மன் கோயிலில் ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். கோயில் வளாகத்தில் விளக்கேற்றியும், கூழ் வாா்த்தும் வழிபட்டனா்.
இதேபோல நெல்லையப்பா் கோயிலில் காந்திமதியம்மன் சந்நிதி, திரிபுராந்தீசுவரா் கோயிலில் அம்மன் சந்நிதி உள்பட பல்வேறு கோயில்களிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...