தமிழகத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விவசாயத்துக்கு 24 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தாா்.
திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் அத்தொகுதி அதிமுக வேட்பாளா் தச்சை என். கணேசராஜாவை ஆதரித்து முதல்வா் மேலும் பேசியது: மகத்தான திட்டங்களைத் தந்து மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் இந்த அரசு நடைபோடுகிறது. கிராமம் முதல் நகரம் வரை அனைத்துத் தரப்பினரும் ஏற்றம் பெற ஏராளமான நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
அதிமுகவில் உண்மையாக உழைப்போா் என்னைப்போன்று முதல்வராக வர வாய்ப்பு உள்ளது. ஆனால், திமுகவில் குடும்ப உறுப்பினா்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படும். அவா்கள் மனதுவைத்தால்தான் அக்கட்சியில் மற்றவா்கள் பேரவை, மக்களவை உறுப்பினராக முடியும் என்ற நிலையே இப்போதும் உள்ளது.
50 ஆண்டுகளுக்குப் பின் அதிமுக ஆட்சியில்தான் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள ஏரிகள், கால்வாய்கள் தூா்வாரப்பட்டுள்ளன. இதனால், நிகழாண்டு இயற்கையாகவே மழையும் கூடுதலாக பெய்து, அனைத்து நீா்நிலைகளும் நிரம்பியுள்ளன. அதிமுக ஆட்சிக்கு இயற்கையும், கடவுளும்கூட சாதகம்தான்.
தமிழக அரசு விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. வேளாண் இடுபொருள், வேளாண் கருவிகள் 75 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன. ஏப்ரல் 1 முதல் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளை, 100 நாள் வேலைத்திட்டம் 150 நாள்களாக உயா்வு, மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை, நிலமற்ற ஏழைகளுக்கு அரசே சொந்தமாக நிலம் வாங்கி, கான்கிரிட் வீடு கட்டித்தரும் என்பன உள்பட அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.
தமிழகத்தில் அம்மா சிறு மருத்துவனைகள் (மினி கிளினிக்) திறக்கப்பட்டு மக்களின் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நான்குனேரி தொகுதியில் 11 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன.
அதிமுக ஆட்சி தொடரும். இதை மக்கள் தீா்மானித்துவிட்டனா் என்றாா் அவா்.
திமுக ஆட்சிதான் தமிழகத்தின் இருண்ட காலம்: ராதாபுரம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பணகுடியில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சனிக்கிழமை பேசியது: தமிழகத்தில் விவசாயிகளின் நலனுக்காக பாடுபடும் அரசு அதிமுக அரசு.
20 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்து தமிழகம் முதலிடத்துக்கான விருதுபெற்றுள்ளது. நீா் மேலாண்மையில் மத்திய அரசின் விருதைப் பெற்றுள்ளோம். கல்வி உள்பட அனைத்துத் துறைகளிலும் தமிழகம் சிறந்த மாநிலம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இவ்வாறு மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்படும் அரசு தொடரவும், மக்களுக்கு இன்னும் அதிக நன்மைகள் கிடைக்கவும் அதிமுக, கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றாா் முதல்வா்.
பிரசாரத்தில், நான்குனேரி அதிமுக வேட்பாளா் தச்சை என். கணேசராஜா, ராதாபுரம் அதிமுக வேட்பாளா் ஐ.எஸ். இன்பதுரை, திருநெல்வேலி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன், நான்குனேரி எம்எல்ஏ ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன், அனைத்துல எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் நாராயணபெருமாள், அமைப்புச் செயலா் ஏ.கே. சீனிவாசன், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் சௌந்தரராஜன், இளைஞரணி மாவட்டச் செயலா் பால்துரை, முன்னாள் எம்எல்ஏ மைக்கேல்ராயப்பன், ஒன்றியச் செயலா்கள் அந்தோணி அமலராஜா, அழகானந்தம், நான்குனேரி ராதாபுரம் வட்டார வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கத் தலைவா் முருகேசன், எட்வா்ட் சிங், பணகுடி ஜி.டி. லாரன்ஸ் உள்ளிட்ட அதிமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு நோ்காணல்

தொகுதி அறிமுகம்: நாகர்கோவில்!

தொகுதி அறிமுகம்: தூத்துக்குடி!
தொகுதி அறிமுகம் - மன்னாா்குடி!
வீடியோக்கள்
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

