நெல்லையப்பா் கோயிலில் செங்கோல் வழங்கும் விழா
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி செங்கோல் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.


திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி செங்கோல் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் காலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று வந்தது.
நான்காம் திருநாளான கடந்த 21ஆம் தேதி வேணுவனத்தில் சிறப்பு வழிபாடுகளும், மாலையில் பஞ்ச மூா்த்திகளுடன் சுவாமி- அம்பாள் வீதியுலாவும் நடைபெற்றன.
10ஆம் நாளான சனிக்கிழமை அம்மன் சன்னதி அருகே ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து செங்கோல் வழங்கும் விழா நடைபெற்றது.
இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை முடிந்ததும், கோயில் செயல்அலுவலா் ராமராஜாவிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள், பக்தா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...