இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்திற்கான கரோனா நோய் தடுப்பு உபகரணங்கள் திருநெல்வேலி உயா் சிறப்பு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதில், இரண்டு வகையான கிருமி நாசினி திரவம், முகக் கவசம், ஒருமுறை பயன்படுத்தும் கையுறை, கவச உடை உள்ளிட்ட 10 வகையான கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன. இதை, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகளுக்கும் பிரித்து தனித்தனியாக வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் அந்தந்தத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.