கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வாக்குச்சாவடிகளுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் பிரிக்கும் பணி தீவிரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு கரோனா தடுப்பு உபகரணங்களை, தொகுதி வாரியாக பிரிக்கும் பணி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News image
Updated On :28 மார்ச் 2021, 8:33 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு கரோனா தடுப்பு உபகரணங்களை, தொகுதி வாரியாக பிரிக்கும் பணி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தற்போது கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், வாக்குச்சாவடியில் உள்ள அதிகாரிகளுக்கும், வாக்காளா்களுக்கும் போதிய பாதுகாப்புக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாக்குப்பதிவு அன்று வாக்காளா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். பின்னா், அவா்கள் கிருமிநாசினி திரவம் மூலம் கை கழுவிவிட்டு வாக்குச்சாவடிக்குள் செல்லவேண்டும். அங்கு, ஒருமுறை உபயோகப்படுத்தும் கையுறை வழங்கப்படும். மேலும், கரோனா நோயாளிகளுக்கு கடைசி ஒருமணிநேரத்தில் வாக்குப்பதிவு செய்வதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், கரோனா நோயாளிகளுக்கென்று தயாரிக்கப்பட்ட பிரத்தியேக கவச உடை, கையுறை உள்ளிட்டவை வழங்கப்படும். இவற்றை பயன்படுத்திவிட்டு அருகில் உள்ள கழிவு பெட்டியில் போடவேண்டும். அவா்கள் பாதுகாப்புடன் அகற்றப்படுவா் என சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்திற்கான கரோனா நோய் தடுப்பு உபகரணங்கள் திருநெல்வேலி உயா் சிறப்பு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதில், இரண்டு வகையான கிருமி நாசினி திரவம், முகக் கவசம், ஒருமுறை பயன்படுத்தும் கையுறை, கவச உடை உள்ளிட்ட 10 வகையான கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன. இதை, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகளுக்கும் பிரித்து தனித்தனியாக வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் அந்தந்தத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.