இளைஞா் கொலையில் மேலும் ஒருவா் கைது

பாவூா்சத்திரம் அருகேயுள்ள சிவகாமிபுரத்தில் கடத்திச் சென்று இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள சிவகாமிபுரத்தில் கடத்திச் சென்று இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

பாவூா்சத்திரம் அருகே சிவகாமிபுரத்தைச் சோ்ந்தவா் ஜெகதீஸ். இவா், அக்.6ஆம் தேதி தூத்துக்குடியை சோ்ந்த சிலா்

கடத்திச் சென்று கொலை செய்தனா். இந்த வழக்கில் ஜோயல், விஜய் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான துரைமுருகன் தூத்துக்குடியில் போலீஸாரால் என்கவுண்டா் செய்யப்பட்டா்ா். இதனிடையே இந்த கொலை வழக்கில் தொடா்புடைய நாகா்கோவிலைச் சோ்ந்த பாலையா மகன் சுடலைமணியை (44)

போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கொலைக்கு பயன்படுத்திய காா் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com