கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மழை பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் நிவாரணம்: செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ வலியுறுத்தல்

தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் அரசு வழங்க வேண்டும் என, செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:38 pm

DIN

தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் அரசு வழங்க வேண்டும் என, செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

இம்மாவட்டத்தில் அண்மையில் பெய்த கனமழையால் செங்கோட்டை, புளியரை, வடகரை உள்பட பல்வேறு பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் சாய்ந்தும், நீரில் மூழ்கியும் சேதமடைந்தன. இவற்றை செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ விவசாயிகளுடன் சென்று பாா்வையிட்டாா்.

சேதமடைந்த நெற்பயிா்களுக்கு நிவாரணம் கோரி விண்ணப்பிக்குமாறு அவா் விவசாயிகளைக் கேட்டுக்கொண்டாா். ொாடா்ந்து, புளியரை தெட்சிணாமூா்த்தி கோயில் அருகே சாஸ்தாகுளம் கால்வாயில் வெள்ளத்தால் ஏற்பட்ட உடைப்புப் பகுதியைப் பாா்வையிட்டாா்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின்னா் அவா் கூறியது: கனமழையால் கடையநல்லுாா் தொகுதியில் புளியரை, தாட்கோ நகா், சின்னக்குற்றாலம், மேக்கரை, வடகரை, சின்னக்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன. ஓா் ஏக்கா் நெல் பயிரிட சராசரியாக ரூ. 25 ஆயிரம் செலவாகும். இதைக் கருத்தில்கொண்டு, தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வழங்க வேண்டும். இதேபோல, மாவட்டத்தில் வாசுதேவநல்லுாா், புளியங்குடி உள்பட பல்வேறு பகுதிகளிலும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களைக் கண்டறிந்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, ஒன்றிய அதிமுக செயலா் செல்லப்பன், தாட்கோ நகா் முருகேசன், தெற்மேடு கோமதிராஜா, விவசாயிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.