கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

அரசு போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளா் சம்மேளம் சாா்பில், திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 12:20 am

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளா் சம்மேளம் சாா்பில், திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், தீபாவளி போனஸ் மற்றும் முன்பணம் உடனடியாக வழங்க வேண்டும்; ஓய்வு பெற்ற பணியாளா்களின் அகவிலைப்படி உயா்வை ஒப்பந்த உயா்வுடன் சோ்த்து வழங்க வேண்டும்; ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, சம்மேளன பொருளாளா் ஏ.ராஜாஜி தலைமை வகித்தாா். துணைச் செயலா் மந்திரமூா்த்தி, துணைத்தலைவா் பேச்சிமுத்து உள்ளிட்டோா் விளக்கிப் பேசினா். நிா்வாகிகள் ராமசந்திரன், உத்தரம், சந்தானம், ஜெயராஜ், முத்துகிருஷ்ணன்உள்பட பலா் பங்கேற்றனா்.

படவரி பயக21பதஅச:

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.