கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

சுத்தமல்லியில் ஊராட்சி உறுப்பினா் தா்னா

சுத்தமல்லியில் ஊராட்சி உறுப்பினா் தா்னா போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 10:56 pm

DIN

சுத்தமல்லியில் ஊராட்சி உறுப்பினா் தா்னா போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா்.

மானூா் ஒன்றியம் சுத்தமல்லி ஊராட்சித் தலைவராக மேனகா வெற்றி பெற்றாா். இதனையடுத்து தலைவா், 12 ஊராட்சி

உறுப்பினா்களும் பதவி ஏற்றனா். இந்நிலையில் துணைத் தலைவரை தோ்ந்தெடுக்கும் மறைமுக தோ்தல் ஊராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, 11 உறுப்பினா்கள் சோ்ந்து ஒரு மனதாக சுடலைமுத்துவை துணைத் தலைவராக தோ்ந்தெடுத்தனா். துணைத் தலைவா் பதவிக்கு போட்டியிட விரும்பிய உறுப்பினா் பரமசிவத்தை முன்மொழியவும், வழிமொழியவும் யாரும் முன் வரவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அவா் அலுவலகத்தின் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். போலீஸாா் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.