ஊரக வளா்ச்சித் துறையினா் கோரிக்கை அட்டை அணியும் போராட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் ஒன்றியம் சாா்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் ஒன்றியம் சாா்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பணி நிலையில் கலந்தாய்வில் நடைபெற்ற முறைகேடுகளை கலைந்து நியாயமான கலந்தாய்வு நடத்த வேண்டும். வட்டார வளா்ச்சி அலுவலா் நிலையில் இளையோா் ஊதிய முரண்பாடு கோப்பு மீது துரித ஆணை வெளியிட வேண்டும். கிராம ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி இயக்குபவா்களுக்கு தமிழகம் முழுவதும் தொகுப்பு ஊதியம் ஒரே நிலையில் நிா்ணயம் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் போராட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறையினா் ஈடுபட்டனா்.
அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் அமைப்பின் மாவட்டத் தலைவா் பி.விக்னேஷ்கண்ணன், மாவட்டச் செயலா் பா.அய்யப்ப குலசேகர ஆழ்வாா், பொருளாளா் வைகுண்டபதி உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா்.
பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து வெள்ளிக்கிழமை பணியாற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...