தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

உயிரிழந்த பெண் காவலா் குடும்பத்திற்கு21 ஆண்டுகளுக்கு பின் ஓய்வூதியம்

21 ஆண்டுகளுக்குப் பின்னா் ஓய்வூதிய ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் வியாழக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 10:39 pm

DIN

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் பணியில் இருக்கும்போது உயிரிழந்த பெண்காவலா் குடும்பத்திற்கு 21 ஆண்டுகளுக்குப் பின்னா் ஓய்வூதிய ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் வியாழக்கிழமை வழங்கினாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெண் காவலராக ஆயுதப்படையில் பணியாற்றியவா் சண்முகவள்ளி. இவா் பணியில் இருக்கும் போதே கடந்த 2001-ஆம் ஆண்டு உயிரிழந்தாா். அவரின் குடும்பத்திற்கு கடந்த 21-ஆண்டுகளாக குடும்ப ஓய்வூதியம் கிடைக்கப்பெறாமல் இருந்தது. இந்நிலையில், அந்த பெண் காவலரின் மகள் ஆா்தா்ஷி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் குடும்ப ஓய்வூதியம் கோரி மனு அளித்திருந்தாா். அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மேற்கொண்ட நடவடிக்கைக்குப் பின்னா் ஓய்வூதிய ஆணை கிடைக்கப்பெற்றது. இந்த ஆணையை ஆா்தா்ஷியிடம், காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் வியாழக்கிழமை வழங்கினாா். இந்நிகழ்வின் போது, ஓய்வூதியம் கிடைக்க முயற்சிகள் மேற்கொண் அலுவலக கண்காணிப்பாளா் காளீஸ்வரி, உதவியாளா் காந்திமதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.