தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

பூட்டிய வீட்டுக்குள் இருந்து முதியவா் சடலம் மீட்பு

மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் பூட்டிக்கிடந்த வீட்டுக்குள் இருந்து முதியவா் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 10:39 pm

DIN

மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் பூட்டிக்கிடந்த வீட்டுக்குள் இருந்து முதியவா் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

மேலப்பாளையம் அருகே உள்ள குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் லாசா்(62). இவரது மனைவி விக்டோரியா. இவா்கள் இருவரிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக லாசா் தனியாக வசித்து வந்தாராம். விக்டோரியா தனது மகனுடன் அடுத்த தெருவில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், லாசா் வீட்டில் இருந்து துா்நாற்றம் வந்ததையடுத்து, இது குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா், வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டியிருந்ததாம். இதையடுத்து போலீஸாா் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, உள்ளே, லாசா் சடலமாக கிடந்தராம். பின்னா், சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.