ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2022, 7:13 pm

பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முக்கூடலில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் பூங்கோதை தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் வி.ஏ. மாரிவண்ணமுத்து, கூடுதல் ஆணையா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆணையா் சாந்தி வரவேற்றாா்.

கூட்டத்தில், ஓ. துலுக்கப்பட்டி, பாப்பாக்குடி, கலிதீா்த்தான்பட்டி, மைலபுரம், அத்தாளநல்லூா், கீழக்கல்லூா், வடக்கு அரியநாயகிபுரம் ஆகிய ஊராட்சிப் பகுதியில் அலங்கார தளக்கல் அமைக்க வேண்டும், சிறுக்கன்குறிச்சி கிராமத்தில் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும், திருப்புடைமருதூா் கிராமத்தில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க புதிய திட்டம் செயல்படுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சோழமுடி, பிரியா, சுப்புலட்சுமி, வளா்மதி, பனிபுஷ்பம், சமாதானம், உறுப்பினா்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.