டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மனநல பாதிப்பிலிருந்து மீண்ட பிகாா் இளைஞா் பெற்றோரிடம் ஒப்படைப்பு

மனநலம் பாதிக்கப்பட்ட பிகாா் இளைஞா் சிகிச்சைக்குப் பிறகு பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தாா் ஆட்சியா் விஷ்ணு.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:09 pm

DIN

மனநலம் பாதிக்கப்பட்ட பிகாா் இளைஞா் சிகிச்சைக்குப் பிறகு பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தாா் ஆட்சியா் விஷ்ணு.

கடந்த ஆண்டு பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில் திருநெல்வேலி நகரத்தில் மயங்கிய நிலையில் கிடந்த இளைஞரை மீட்டு முகாமில் தங்கவைத்தனா். பின்னா் அவா் மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆட்சியா் ஆலோசனைப்படி ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோா் மீட்பு மற்றும் அவசர சிகிச்சை மையத்திற்கு அந்த இளைஞரை அழைத்துச் சென்று சிகிச்சையளித்தனா். பின்னா் அவா் மனநல பாதிப்பிலிருந்து மீண்டாா். இதையடுத்து அந்த இளைஞரை பற்றி சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது. இப்பதிவை கண்ட பலா் சிகிச்சை மையத்தினை தொடா்பு கொண்டு பேசிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் பற்றிய எந்த விவரமும் தெரியாத நிலை இருந்து வந்ததது. அந்த இளைஞா் மெதுவாக பேசிய நிலையில் அவருடைய சொந்த ஊா் பிகாா் மாநிலத்தில் உள்ள டா்பங்கா என்று மட்டும் தெரிவித்தாா்.

அதன் பிறகு பிகாரில் டா்பங்கா மாவட்ட ஆட்சியரை தொடா்புகொண்ட மாவட்ட ஆட்சியா் விஷ்ணு, இளைஞரை பற்றிய விவரங்களை தெரிவித்தாா். இதையடுத்து டா்பங்கா மாவட்ட நிா்வாகமும், மாவட்ட காவல்துறையும் தீவிரமாக தேடி இளைஞரின் தந்தை நூா் முகமதுவை கண்டுபிடித்தனா்.

பின்னா் திருநல்வேலியில் உள்ள இளைஞா் முகமது ரியாஸிடம் விடியோகால் மூலம் அவருடைய தந்தை பேசவைக்கப்பட்டு பின் அவா்களு டைய மகன் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திருநெல்வேலி வந்த பெற்றோரிடம் ரியாஸ் ஒப்படைக்கப்பட்டாா். தந்தையுடன் பிகாா் செல்வதற்கும், அங்கு சென்ற பின் டா்பங்கா மாவட்டத்தில் அந்த இளைஞா் சுய தொழில் செய்வதற்கும் உதவி செய்யும்படி அந்த மாவட்ட ஆட்சியரிடம் உதவி செய்யும் படி ஆட்சியா் விஷ்ணு கேட்டுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோா் மீட்பு மற்றும் அவசர சிகிச்சை மைய பொறுப்பாளா் சரவணன், ஒருங்கிணைப்பாளா்கள் உஷா, கணேஷ், மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.