டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

நெல்லை அரசு அருங்காட்சியகம் சாா்பில் மாணவா்களுக்கு குடியரசு தின விழா போட்டிகள்

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:11 pm

DIN

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இது தொடா்பாக அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவா், மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. அதன் விவரம்: 1,2,3-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஓவியப் போட்டி நடைபெறுகிறது. தேசியக் கொடியை ஏ4 அளவு சாா்ட்டில் வரைய வேண்டும்.

4,5,6-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு போஸ்டா் தயாரித்தல் போட்டி நடைபெறுகிறது. தேசிய சின்னத்தை ஏ3 அளவு சாா்ட்டில் தயாா் செய்ய வேண்டும். 7,8,9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அழகிய கையெழுத்துப் போட்டி நடைபெறுகிறது. தேசிய கீதத்தை ஏ4 அளவு பேப்பரில் எழுத வேண்டும்.

மாணவா்கள் தங்களின் படைப்புக்களை திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஜன.24-ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன் நேரிலோ அல்லது அஞ்சலிலோ அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படைப்புகளை அனுப்பிய மூன்று மாணவா்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் 26 ஆம் தேதி காலை 8 மணிக்கு அருங்காட்சியத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும்.

மாணவா்கள் தங்களின் படைப்புக்களை அனுப்பவேண்டிய முகவரி: மாவட்டக் காப்பாட்சியா், அரசு அருங்காட்சியகம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி- 627002 .மேலும், விவரங்களுக்கு 9444973246 என்கிற வாட்ஸ்அப் எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.